Monday, May 30, 2011

தாய்மார்களுக்கு=எப்படி பாடுவது

             அன்பான தாய்மார்களே இந்த தாலாட்டுப் பாடல்களைப் பாட எந்த இசை அறிவும் தேவை இல்லை. இந்தப் பாடல்களை உங்களுடைய குரலில் சிறிது ராகத்துடன் உங்கள் குழந்தைகளுக்குப் பாடி தூங்க வையுங்கள். சிறுது சத்தமாகப் பாடி குழந்தைகளின் அழுகையை போக்குங்கள்.  இதில் ஒரு சுவாரசியமா விஷயம் உங்கள் குழந்தைகளை தாலாட்டு பாடி தூங்க வைத்து இருந்ந்தால், வளர்த்து அவர்கள் வேலைக்குப் போகும் போது கூட இந்த தாலாட்டுப் பாடல்களை நீங்கள் பாடினால் அவர்களுக்கு தூக்கம் வரும்.
                               
                                          சித்திரமும் கை பழக்கம்a
                                          செந்தமிழும் நா பழக்கும்
என்பது போல இந்த பாடல்களை பாட பாட நீங்களும் இதில் புழமை பெறலாம்,

Wednesday, May 18, 2011

அகிலாண்ட ஈஸ்வரி தாலாட்டு


மதுரைக்கும் தெற்க்கே மான் அளையும் பொட்டலிலே,

சந்தனப் பொய்கையிலே சங்கிலிப் பின்னலிலே,

கர்ணரும் சீர்மகளும் கைத்தீர்த்தம் ஆடலிலே,

கடலில் நுரையொதுக்கி நீ கண்டெடுத்த ரத்தினமோ, 

பாசி நுரையொதுக்கி நீ பார்த்தெடுத்த ரத்தினமோ;

பாண்டியரும் சீர்மகளும் பனித்தீர்த்தம் ஆடலிலே, 

ஆதி சிவனாரும் அகிலாண்ட ஈஸ்வரியும் 

கூடிக்குலாவிக் கொடுத்துவிட்ட நாயகமோ, 

நாயகமோ,நவமணியோ நீ நல்ல குலவம்சமோ,

ஓசை நவமணியோ நீ ஒசந்த குலவம்சமோ,

சேரார் நவமணியோ நீ செட்டி குலவம்சமோ.



அர்ச்சுனனார் தாலாட்டு



பரட்ட புளிய மரம், பந்தடிக்கும் நந்தவனம்,

நந்தவனம் கண்திறந்து, நாலுவகை பூவெடுத்து ,

பூவெடுத்து பூசை செய்யும், புண்ணியவார் பேரேனோ,

மலரெடுத்து  பூசை செய்யும், மகராசர் பேரேனோ,

அரும்பெடுத்து  பூசை செய்யும், அர்சுனனார் பேரேனோ,

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரேரோ,

         ஆரிரேரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ
          

Sunday, May 15, 2011

வாய் வழி தாலாட்டு



ஆரடித்தார் ஏனழுதாய் அடித்தாரைச் சொல்லி அழு
கண்ணே என் கண்மணியே கடிந்தாரைச் சொல்லி அழு


விளக்கிலிட்ட வெணையைப் போல் வெந்துருகி நிற்கையிலே
கலத்திலிட்ட சோறது போல் கண்கலக்கம் தீர்த்தாயே

வம்புக்கழுதாயோ வாயெல்லாம் பால் வடிய
அத்தை அடித்தாளோ அல்லி மலர்த் தண்டாலே


மாமன் அடித்தானோ மல்லிகைப் பூச் செண்டாலே
அடித்தாரைச் சொல்லி அழு ஆக்கினைகள் செய்து வைப்போம்

ராமர் தாலாட்டு

      

         சங்குடைத்து வில்வளைத்து, ராமர் ஜானகியை மாலையிட்டு,
         மாலையிட்டு கைபிடித்து, மகிழம்பூ தேரேரி,

         தேரசய மணிகுலுங்க, தேவாக்கள் பாடி வர,

         ரதமசய  மணிகுலுங்க, ராஜாக்கள்  பாடி வர,

         செல்லாமே இல்லாமே, சிதறுதய்யா பூந்தேறு,

          ஓடாமே இல்லாம ஓடுதய்யா பூந்தேறு,

         திட்டகிடாயமர்த்தி தெருவுக்கொரு பொங்கலிட்டு,
  
         கைகேசி சொற்படிக்கு ராமர் கானகம் போய் சேர்ந்தாராம்.

         ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரேரோ,

         ஆரிரேரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ
          

Thursday, May 12, 2011

தாலாட்டு ஓர் அறிமுகம்


            குழந்தையின் அழுகையை நிறுத்தவும்தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு ஆகும்.தாயின் அன்பையும்சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும்.



தாலாட்டு பெயர் காரணம்

                   தால் என்பது நாவைக் குறிக்கும்நாவை ஆட்டி வரவழைக்கும் சத்தம் “தாலாட்டு” எனப்படுகிறதுஆராரோ ஆராரோ என சந்தமிசைத்து பாடுவதால் ஆராட்டுதல் என்றும்வழங்கப்பட்டு வருகிறது

       தாலாட்டுப் பாடல்களில் தத்ரூபமான உவமைஉருவக அணிகள் கையாளப்பட்டுள்ளன.சிலநேரங்களில் தன் சொந்த சோகங்களையும் சுய வாழ்வின் அவலங்களையும், நேரடியாகவும் மறைமுகமாகவும், குறிப்பாகவும், குறியீடாகவும் சொல்ல தாலாட்டு பயன்பட்டது.

                   "தலைப் பிள்ளை பெற்றால் தானே வரும் தாலாட்டு" என்ற பழமொழியும்,"தாலாட்டு இசையின் தாயூற்று" என்ற பழமொழியும், "தாலாட்டும் ஒப்பாரியும் தனக்குத் தக்கன" என்ற பழமொழியும் வழக்கத்தில் உள்ளன. 

                     இன்றைய நிலையில் தாலாட்டுப் பாடுவது அருகி வருகின்றது. இதை மீண்டும் வளர்க்கும் சிறு முயற்சி தான் இந்த ப்ளாக்.