மதுரைக்கும் தெற்க்கே மான் அளையும் பொட்டலிலே,
சந்தனப் பொய்கையிலே சங்கிலிப் பின்னலிலே,
கர்ணரும் சீர்மகளும் கைத்தீர்த்தம் ஆடலிலே,
கடலில் நுரையொதுக்கி நீ கண்டெடுத்த ரத்தினமோ,
பாசி நுரையொதுக்கி நீ பார்த்தெடுத்த ரத்தினமோ;
பாண்டியரும் சீர்மகளும் பனித்தீர்த்தம் ஆடலிலே,
ஆதி சிவனாரும் அகிலாண்ட ஈஸ்வரியும்
கூடிக்குலாவிக் கொடுத்துவிட்ட நாயகமோ,
நாயகமோ,நவமணியோ நீ நல்ல குலவம்சமோ,
ஓசை நவமணியோ நீ ஒசந்த குலவம்சமோ,
சேரார் நவமணியோ நீ செட்டி குலவம்சமோ.

No comments:
Post a Comment